செவ்வாய், 9 அக்டோபர், 2018

கொலு பொம்மைகள்

வணக்கம்.
கொலு  பொம்மைகள்.
நவராத்திரியில்  முக்கிய அம்சம் கொலு பொம்மைகள் வைப்பதாகும்.கொலுப் படிகள் 3,5,7,9,11என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.கொலுவில் உள்ள பொம்மைகள் மண்ணினால்  செய்யப்பட்டிருந்தால் சிறப்பானதாகும்.
கொலு பொம்மைகளை எப்படி  கொலு படிகளில்  அமைக்க வேண்டும் என்பதனைபற்றி பார்ப்போம்.
முதல் படியில்:ஓர் அறிவு உபிர்களான புல்,செடி,கொடி ,தாவர வகை பொம்மைகள்.
இரண்டாவது படியில்:ஈரறிவு உபிர்களான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாவது படியில்:   மூன்றறிவு  உபிர்களான கரையான்,எறும்பு போன்ற  பொம்மைகள்.
நான்காவது படியில்: நான்கு அறிவு உபிர்களான நண்டு,வண்டு போன்ற பொம்மைகள்.
ஐந்தாவது படியில்:ஐந்து அறிவு உபிர்களான விலங்குகள்,பறவைகள் போன்ற பொம்மைகள்.
அறிவது படியில்:ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள்.
ஏழாவது படியில்:மனித நிலையில் இருந்து உயர்ந்த மகான்கள்,மகரிஷிகள் போன்றவர்களின் பொம்மைகள்.
எட்டாவது படியில்:அஷ்டதிக் பாலகர்கள்,தேவதைகள்,நவக்கிரகங்கள்,துர்கா, லட்சுமி, சரஸ்வதி போன்ற பொம்மைகள்.
ஒன்பதாவது படியில்:பிரம்மா, விஷ்ணு, சிவன்ஆகிபோர்கள் தேவியர்களுடன் இணைந்து உள்ள பொம்மைகள் வைத்து அவற்றின் நடுவில் ஆதிபராசக்தியின் பொம்மைகள் வைக்கவேண்டும்.கொலு வைத்து அன்னை யின் அருளைப் பெறுவோம்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...