சனி, 6 அக்டோபர், 2018

பணவரவை அதிகப்படுத்தும் குளிகை காலங்கள்

வணக்கம்.
              பண வரவை அதிகப்படுத்தும் குளிகை காலம் .
              உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு  2ஆம்  வீட்டின் அதிபதி எந்த கிரகம் எனப் பாருங்கள்.அந்த கிரகத்திற்கு என்ன கிழமை வருகிறதோ அந்த  கிழமைக்கு உண்டான குளிகை நேரத்தை தேர்ந்தெடுங்கள்.குளிகை காலத்தில் செய்கின்ற செயல் திரும்பத்திரும்ப நடைபெறும்.சுப காரியங்களுக்கு குளிகை நேரத்தை    பயன்படுத்தலாம்.
கிழமை        குளிகை காலம்.
ஞாயிறு:         மதியம் 03.00 முதல் மதியம் 04.30 வரை   
திங்கள்:         மதியம் 01.30 முதல் மதியம் 03.00 வரை
செவ்வாய்:    நண்பகல் 12.00 முதல் மதியம் 01.30 வரை
புதன்:              காலை 10.30 முதல் நண்பகல் 12.00 வரை         
வியாழன்:     காலை 09.00 முதல் காலை 10.30 வரை
வெள்ளி:        காலை 07.30 முதல் காலை 09.00 வரை
சனி:                 காலை 06.00 முதல் காலை 07.30 வரை
                உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் இலக்கினம் சிம்மம் என்றால் அவருக்கு 2-ஆம் அதிபதி புதன் பகவான்.இப்பொழுது குளிகை நேரத்தில் புதன் கிழமையைத் தேர்ந்தெடுங்கள்.புதன் கிழமை குளிகை காலம் காலை 10.30--12.00.இந்த காலத்தில் நீங்கள் யாரிடமாவது  பணம் கடன் வாங்கி இருந்தால் இந்த வேலையில் கடன் வாங்கிய பணத்தில் சிறு தொகையை அடையுங்கள்.உங்களுக்கு வர வேண்டிய பணம் இறை சக்தியால் பிரபஞ்சம் கொடுக்க ஆரம்பிக்கும்.

                                                                            நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...